காலம் செல்லச் செல்ல எமது அனைத்துச் செல்வங்களும் எம்மை விட்டுச் சென்றுவிடும், ஆனால் கல்விச் செல்வம் ஒருபோதும் எம்மை விட்டுச் செல்லாது. தங்கமோ, வெள்ளியோ நபிமார் விட்டுச் சென்றதில்லை, மாறாக கல்வி ஞானம் ஒன்றையே செல்வமாய் விட்டுச் சென்றார்கள். கல்வி அறிவு பெற்றவர் கண்கள் இரண்டை பெற்றவர் போலாவார். தானும் கற்று பிறருக்கும் கற்று கொடுப்பவர்களுக்கு அல்லாஹ் கல்வி ஞானத்தை அதிகரித்துக் கொடுக்கிறான். நாம் கற்கும் நேரம் எல்லாம் எமக்காக வானில் பறக்கின்ற பறவைகளும் நீரில் நீந்தும் மீன்களும் எமது கண்களுக்குப் புலப்படாத மலக்குகளும் எமக்காக துஆ செய்கின்றன. எனவே எமது கல்வி விடயங்களில் கூடுதல் ஈடுபாட்டுடன் தொடர்ந்தும் முயற்சியுடன் கற்போமாக! M.A.F. Shahma Grade - 06 (Gampola Zahira College)
Comments
Post a Comment